டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நிதி உதவி திரட்டுவது கடினமாக உள்ளது: யுவ்ராஜ் சிங்

புற்றுநோய் விழிப்புணர்வுக்கு நிதி உதவி திரட்டுவது கடினமாக உள்ளது...

News image
Updated On :4 அக்டோபர் 2017, 11:00 am

எழில்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், 2012-ல் யுவிகேன் என்கிற புற்றுநோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன்மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்துவருகிறார். 

இந்நிலையில் யுவிகேன் நிறுவனத்தின் புற்றுநோய் விழிப்புணர்வு மையம் ஒன்றை ஹிமாசல் பிரதேசத்தில் உள்ள ஷுலினி பல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளார். மேலும் இப்பல்கலைக்கழகத்தில் யுவ்ராஜ் சிங் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள மைதானத்தையும் அவர் திறந்து வைத்தார். 

இந்த விழாவில் பேசிய யுவ்ராஜ் சிங், புற்றுநோய் விழிப்புணர்வுக்கு நிதி உதவி திரட்டுவது கடினமாக உள்ளது. இங்குள்ள மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வில் ஈடுபடுவது மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன் இணைந்து அவர்கள் பணியாற்றவுள்ளது மனநிறைவை அளிக்கிறது. மேலும் பலரும் இணைந்து எனக்குத் தோள் கொடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.