வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கார் டயர் வெடித்தது: காயமின்றி உயிர் தப்பினார் சுரேஷ் ரெய்னா!

காவல்துறை ரெய்னாவுக்கு மற்றொரு காரை ஏற்பாடு செய்து தந்தது. அதில் கான்பூருக்குப் புறப்பட்டு...

News image
Updated On :13 செப்டம்பர் 2017, 10:07 am

எழில்

துலீப் டிராபி போட்டியில் இந்தியா ப்ளூ அணியின் கேப்டனாக உள்ளார் கிரிக்கெட் வீரர் ரெய்னா.

கான்பூரில் நடைபெறும் துலீப் டிராபி போட்டியில் கலந்துகொள்வதற்காக காசியாபாத்திலிருந்து கான்பூருக்கு தன்னுடைய சொகுசு காரில் நேற்று வந்துகொண்டிருந்தார். 

இந்நிலையில் காலை 2 மணியளவில் எட்டாவா என்ற இடத்தின் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாகக் காயம் எதுவுமின்றி சுரேஷ் ரெய்னா உயிர் தப்பினார்.

அதிகாலை வேளையில் ரெய்னாவுக்கு உதவ வந்தவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்கள். பிறகு காவல்துறை ரெய்னாவுக்கு மற்றொரு காரை ஏற்பாடு செய்து தந்தது. அதில் கான்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார் ரெய்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.