40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இந்தியாவின் முதல் தங்க மங்கை மீராபாய் சானு

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் முதல் தங்கப்பதக்கம் வென்றதின் மூலம் தங்க மங்கை ஆனார் மீராபாய் சானு.

Updated On :6 ஏப்ரல் 2018, 12:58 am IST

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதலில் முதல் தங்கப்பதக்கம் வென்றதின் மூலம் தங்க மங்கை ஆனார் மீராபாய் சானு.
மணிப்பூர் மாநிலம் பளுதூக்குதல், குத்துச்சண்டை, கால்பந்து விளையாட்டு புகழ் பெற்றதாக திகழ்கிறது. பளு தூக்குதலில் குஞ்சுராணி தேவி உலக சாம்பியன் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக மணிப்பூர் இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மீராபாய் சானுவும் பளுதூக்குதலில் தற்போதையை நிலையை அடைய போராட வேண்டியிருந்தது. 
முன்னாள் வீராங்கனை குஞ்சுராணியிடம் பயிற்சி பெறும் மீராபாய் சானு, கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2017 நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சாம்பியன் பட்டம் வென்றார். 
கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் தகுதி பெற்றாலும் தோல்வியை தழுவினார். இதற்கிடையே தற்போது கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடைப்பிரிவில் 196 கிலோ தூக்கி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
ஏற்கெனவே அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது. தற்போதைய வெற்றிக்காக மணிப்பூர் அரசும் ரூ.20 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மீராபாய் சானு கூறியதாவது:
நான் போட்டியில் பங்கேற்க வந்தபோது சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் வரவில்லை. ஆனால் இங்கு வந்த பின்னர் தான் நிச்சயம் புதிய சாதனை படைக்க வேண்டும் எனத் தோன்றியது. இதற்காக நான் கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். இது காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது பதக்கமாகும் என்றார்.
வெள்ளி வீரர் குருராஜா: காமன்வெல்த் போட்டி பளுதூக்குதல் ஆடவர் 56 கிலோ பிரிவில் 249 கிலோ எடை தூக்கி பி.குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 
கர்நாடக மாநிலம் குந்தாப்பூரைச் சேர்ந்த குருராஜா முதன்முறையாக காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 
25 வயது நிறைந்த குருராஜா போட்டியின் முதல் இருமுறை முயற்சியில் தோல்வியை தழுவினார். இதையடுத்து அவரது பயிற்சியாளர் ராஜேந்திர பிரசாத், உனது குடும்ப சூழ்நிலையை நினைத்து செயல்படு என அறிவுறுத்தினார். இதையடுத்து எனது குடும்பம், நாட்டை மனதில் வைத்து எடையை தூக்கினேன். வெள்ளியை வென்றேன் என குருராஜா தெரிவித்தார்.
இந்திய விமானப்படையில் பணிபுரிந்து வரும் குருராஜா கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பளு தூக்கும் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். டிரக் லாரி டிரைவரான தனது தந்தை 8 குழந்தைகளை வளர்க்க கடும் பாடுபட்டதை நினைத்து, குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.