அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு, ஆஸி. அழைப்பு

அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆஸி. அணியின் சர்வதேச போட்டிகள் அட்டவணையை திங்கள்கிழமை வெளியிட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை செயல் அலுவலர் ஜேம்ஸ் சதர்லேண்ட் கூறியதாவது:
பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டித் தொடரில் 4 டெஸ்ட்கள் இடம் பெறுகின்றன. இதில் அடிலெய்டில் வரும் டிசம்பர் 6 முதல் 10-ஆம் தேதி வரை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பகலிரவு போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துளளோம்.
இந்தியா அடிலெய்ட் பகலிரபு டெஸ்ட்டில் விளையாட வேண்டும் என்பது எங்களது விருப்பம். இதற்காக தொடர் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்.
இதுவரை இந்தியா பகலிரவு டெஸ்ட்டில் பங்கேற்றதில்லை. அடிலெய்டில் ஏற்கெனவே நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகள் பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com