உலக பளுதூக்கும் சாம்பியன் மீராபாய் சானு ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என இந்திய தலைமைப் பயிற்சியாளர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
ஜாகர்த்தாவில் வரும் 18 முதல் செப். 2-ஆம் தேதி வரை ஆசியப் போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியா சார்பில் 541 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள பிரிவுகளில் பளுதூக்குதலும் ஒன்றாகும். கடந்த ஏப்ரல் மாதம் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக தங்கப் பதக்கங்களை குவித்தனர்.
இதில் 48 கிலோ பிரிவில் மீராபாய் சானு உலக சாம்பியன் பட்டத்தையும், காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்றார். இந்நிலையில் ஆசியப் போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என பயிற்சியாளர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக மீராபாய் ஆசிய போட்டியில் இருந்து விலகும்படி கூறியுள்ளதாகவும் சர்மா தெரிவித்தார்.
கடந்த மே மாதம் முதல் முதுகுவலியால் மீராபாய் சானு அவதிப்பட்டு வருகிறார். மேலும் முழுமையான பளு தூக்கும் பயிற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக இந்திய பளுதூக்கும் சம்மேளனத்துக்கு அறிக்கையும் தந்துள்ளேன். அவர்கள் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
ஆசிய போட்டிகளை விட ஒலிம்பிக் தகுதிச் சுற்று மிகவும் முக்கியமானது. உலக சாம்பியன் போட்டி வரும் நவம்பர் 1-ஆம் தேதி அஷ்காபாத்தில் தொடங்குகிறது. இது முதல் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியாகும். மீராபாய் சானுவும் சம்மேளன நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது முதுகுவலிக்கான காரணத்தை நாடு முழுவதும் டாக்டர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை.
இப்பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை முடிவெடுக்கப்படும் என சம்மேளன செயலர் சகதேவ் யாதவ் தெரிவித்தார்.
ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் பளுதூக்குதலில் கண்டிப்பாக தங்கம் வெல்லும் வாய்ப்புள்ள மீராபாய் சானு விலகினால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவைத் தரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

மாப்ள சீமான்... இதேபோன்ற மேடை 2 மாதங்களுக்கு முன்பு அமைந்திருந்தால்...: நயினார் நாகேந்திரன் பேச்சு!

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கார்கில் போர் நினைவிடத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



