நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியதாவது:
நமது சுதந்திரம் போல வாழ்க்கையில் எல்லாமே கடின உழைப்பில் உருவானதுதான். நம்முடைய துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மட்டும் இல்லாவிட்டால் இந்திய (கிரிக்கெட்) அணி கிடையாது. நமது சுதந்திரத்தைச் சர்வசாதாரணமாக எண்ண வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.