
ஆசியப் போட்டி டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மனிகா பத்ரா முன்னேறியுள்ளார்.
அவர் 11-3, 11-7, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் நந்தனாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதே போல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூத்த வீரர் சரத் கமல் 11-4, 11-8, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் குரேஷ் முகமதை வென்று தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீரர் சத்யன் 11-3, 9-11, 14-12, 11-1, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின சந்டோஸாவை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவில் மெளமா தாஸ் தோல்வியடைந்து வெளியேறினார்.
தோல்விகள்...
* ஆடவர் வாலிபால் பிரிவில் இந்திய அணி 2-3 என்ற செட் கணக்கில் மியான்மரிடம் தோல்வியடைந்தது.
* செபாக்டக்ரா மகளிர் பிரிவில் இந்திய மகளிர் அணி 0-2 என தாய்லாந்திடம் தோல்வியைத் தழுவியது.
* மகளிர் ஸ்குவாஷ் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என ஹாங்காங்கிடம் தோல்வியடைந்தது.
* ஜூடோ வீரர்கள் ஹர்ஷ்தீப் சிங், கரீமா செளத்ரி ஆகியோர் நாக் அவுட் சுற்றில் தோல்வியுற்றனர்.
* குராஷ் ஆட்டத்தில் இந்தியாவின் டேனிஷ் சர்மா,
ஜோதி டோகாஸ் ஆகியோரும் தோல்வியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







