கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இஷாந்தின் நோ பால் பிரச்னை குறித்து விராட் கோலி பேட்டி!

முதல் டெஸ்ட் முடிந்தபிறகு நோ பால் பிரச்னையால் தன் மீதே கோபத்தில் இருந்தார் இஷாந்த் சர்மா...

News image
Updated On :13 டிசம்பர் 2018, 7:42 am

எழில்

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக நாளை பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. 

முதல் டெஸ்டில் நோ பால்கள் வீசியதால் இஷாந்த் சர்மாவுக்குக் கிடைக்கவேண்டிய சில விக்கெட்டுகள் கிடைக்காமல் போயின. இதனால் இந்திய அணிக்குப் பெரிதாகப் பிரச்னை ஏற்படாமல் போனாலும் இஷாந்த் சர்மா போன்ற மூத்த வீரர் ஒருவர் நோ பால்கள் வீசி வருகிற விக்கெட்டுகளை வீணடிக்கலாமா என்கிற விமரிசனங்கள் எழுந்துள்ளன. 

2-வது டெஸ்டுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:

முதல் டெஸ்ட் முடிந்தபிறகு நோ பால் பிரச்னையால் தன் மீதே கோபத்தில் இருந்தார் இஷாந்த் சர்மா. அதைச் சரிசெய்யவேண்டும் என்று அவரே நினைக்கிறார். எனவே நாங்கள் அதைப் பற்றி அவரிடம் மீண்டும் மீண்டும் பேசவேண்டியதில்லை. அவர் பொறுப்பான கிரிக்கெட் வீரர். நீண்ட காலம் விளையாடி வருகிறார். அணியில் உள்ளவர்கள் போலவே அவரும் தன்னிடம் சரிசெய்யவேண்டியது என்ன என்று தெரிந்துவைத்துள்ளார். எனவே அதுகுறித்து அவரிடம் பேசவேண்டியதில்லை. தன்னிடமுள்ள பிரச்னையை அவர் நன்கு அறிவார், அதைச் சரிசெய்யும் ஆர்வத்தில் உள்ளார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.