/

3-வது டெஸ்ட்: 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு! விஜய், ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கம்!

இந்திய அணியிலிருந்து விஜய், ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:58 pm

எழில்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது. 

இதற்கான இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தமுறை விளையாடவுள்ள 11 வீரர்களின் பெயர்களை நேரடியாக அறிவித்துள்ளது இந்திய அணி. இந்திய அணியிலிருந்து விஜய், ராகுல், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். மயங்க் அகர்வால், ஜடேஜா, ரோஹித் சர்மா ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஹேண்ட்ஸ்காம்ப்-புக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), விஹாரி, மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜடேஜா, பூம்ரா, ஷமி, இஷாந்த் சர்மா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.