புஜாரா, கோலி அபாரம்: இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம்!

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 82 ரன்களில் ஆட்டமிழந்தார்... 
புஜாரா, கோலி அபாரம்: இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம்!

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதல் நாள் முடிவில் 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 68, கோலி 47 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இன்று புஜாரா தனது சதத்தையும் கோலி அரை சதத்தையும் பூர்த்தி செய்தார்கள். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 82 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 106 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களை விடவும் சற்று விரைவாக ரன்கள் எடுத்த ரஹானே, 34 ரன்களில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 153 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 35, ரிஷப் பந்த் 3 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com