மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

மீண்டும் சர்ச்சைக்குள்ளான சச்சின் மகள்: மென்பொருள் பொறியாளர் கைது

சச்சின் டெண்டுல்கர் மகளின் பெயரில் போலி ட்விட்டர் பக்கம் ஏற்படுத்திய மென்பொருள் பொறியாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2018, 3:55 pm IST

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பெயரில் போலியான ட்விட்டர் பக்கம் ஏற்படுத்தி அதில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவிட்டு வந்த மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நிதின் சிஷோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பெயரில் ட்விட்டர் பக்கம் ஏற்படுத்தி அதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவேற்றியுள்ளார். இதன்காரணமாக அந்தேரி காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வருகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர், தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாக சாரா டெண்டுல்கரிடம் அவதூறாகப் பேசியதாகக் கூறி அம்மாநில காவல்துறை அந்த நபரைக் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.