ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிறுபிள்ளைத்தனமான தவறுகள்: பாண்டியா மீது கபில் தேவ் விமரிசனம்!

2-வது டெஸ்டில் செய்தது போன்ற சிறுபிள்ளைத்தனமான தவறுகளை பாண்டியா செய்தால் என்னுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய தகுதி...

News image
Updated On :18 ஜனவரி 2018, 5:18 am

எழில்

2-வது டெஸ்டில் செய்தது போன்ற சிறுபிள்ளைத்தனமான தவறுகளை பாண்டியா செய்தால் என்னுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய தகுதி அவருக்கு இருக்காது என்று முன்னாள் ஆல்ரவுண்டர் கபில் தேவ் ஹார்திக் பாண்டியாவை விமரிசனம் செய்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது அந்த அணி. இரு அணிகளுக்கு இடையே செஞ்சுரியன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி நாளான புதன்கிழமை இந்தியா 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 252 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. எனினும், தென் ஆப்பிரிக்காவின் எல்.கிடி மற்றும் ராபாடாவின் பந்துவீச்சு, இந்தியாவை 151 ரன்களுக்குள்ளாக சுருட்டியது. 2-ஆவது இன்னிங்ஸில் 39 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்திய எல்.கிடி ஆட்ட நாயகன் ஆனார்.

நேற்று, இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 6 ரன்களில் கிடி பந்துவீச்சில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் அஜாக்கிரதையாக ஓடி ரன் அவுட் ஆகி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார். அவருடைய இந்த மோசமான ஆட்டங்கள் ஆல்ரவுண்டர் கபில் தேவின் அதிருப்திக்கும் ஆளாகியிருக்கிறது. கபில் தேவுடன் ஒப்பிட்டு பாண்டியா அடிக்கடிப் பேசப்படுவதால் முதலில் பாண்டியாவுக்கு ஆதரவாகப் பேசிவந்த கபில் தேவ் தற்போது விமரிசனம் செய்துள்ளார்.

Story image

தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது. 

2-வது டெஸ்டில் செய்தது போன்ற சிறுபிள்ளைத்தனமான தவறுகளை பாண்டியா செய்தால் என்னுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடிய தகுதி அவருக்கு இருக்காது. பாண்டியாவுக்கு நிறைய திறமைகள் உண்டு. அதை முதல் டெஸ்டில் நிரூபித்துள்ளார். ஆனால் சரியான மனநிலையுடன் விளையாடுவது குறித்து அவர் யோசிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

முன்னாள் வீரர் சந்தீப் பாடீலும் பாண்டியாவை கபில் தேவுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கூறியதாவது: கபில் தேவுடன் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். நிச்சயம் பாண்டியாவை கபிலுடன் ஒப்பிட முடியாது. கபில், 15 வருடங்கள் இந்திய அணிக்காக அருமையாக விளையாடியவர். ஆனால் பாண்டியா இப்போதுதான் 5-வது டெஸ்டில் விளையாடுகிறார். கபில் தேவுடன் ஒப்பிட அவர் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.