பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வென்றது. இதன்மூலம் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் 'பி' பிரிவில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது இந்தியா.
இரு அணிகள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 48.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 21.4 ஓவர்களில் 155 ரன்களுடன் வாகை சூடியது.
இந்திய அணி தனது காலிறுதியில் வங்கதேச அணியைச் சந்திக்கவுள்ளது. ஜனவரி 26 அன்று இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.