ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஞ்சி போட்டியில் அறிமுகமாகும் புதுச்சேரி அணி!

ரஞ்சி போட்டி நவம்பர் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது. 153 ஆட்டங்கள் கொண்ட இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று பிப்ரவரி 6 அன்று...

News image
Updated On :18 ஜூலை 2018, 12:16 pm

எழில்

புதுச்சேரி கிரிக்கெட் அணிக்கு அசோசியேட் உறுப்பினர் பதவியை அளித்துள்ளது பிசிசிஐ. இதை பிசிசிஐ நிர்வாகக் குழுவும் அங்கீகரித்துள்ளது. இதையடுத்து இந்த வருட ரஞ்சி போட்டியில் புதுச்சேரி அணி இடம்பெற்றுள்ளது.

2018-19 உள்ளூர் சீசனில் பிசிசிஐ சார்பில் 2017 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 13 முதல் இப்போட்டிகள் தொடங்குகின்றன.  ஆரம்பமாக, மகளிர் டி20 சாலஞ்சர் கோப்பை ஆகஸ்ட் 13 முதல் தொடங்கவுள்ளன. ஆடவர் பங்குபெறும் துலீப் கோப்பை ஆகஸ்ட் 17 முதல் தொடங்கவுள்ளது.

ரஞ்சி போட்டி நவம்பர் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது. 153 ஆட்டங்கள் கொண்ட இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று பிப்ரவரி 6 அன்று நடைபெறுகிறது. இந்த வருட ரஞ்சிப் போட்டியில் அருணாசல பிரதேசம், பிஹார், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், உத்தரகண்ட் ஆகிய 9 புதிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த வருடம் ரஞ்சி போட்டியில் புதுச்சேரி அறிமுகமாகவுள்ளது.

சிஏபி எனப்படும் புதுச்சேரி கிரிக்கெட் சங்கம், கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்யவும் அதிகாரபூர்வ அமைப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வருட ரஞ்சிப் போட்டியில் 37 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.