ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாட்டுக்காக விளையாடி காயம் அடைந்தவருக்கு மரியாதை அளியுங்கள்: ரித்திமன் சாஹா வேண்டுகோள்!

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரு மாதங்களுக்கு சாஹாவால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது...

News image
Updated On :19 ஜூலை 2018, 9:02 am

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்  விக்கெட் கீப்பர் ரித்திமன் சாஹா. இதன்பிறகு, ஐபிஎல் தொடரில் அவருக்குக் கைவிரலில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து குணமடையாத நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறவில்லை. சாஹாவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றார்.

இந்நிலையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் சாஹா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து சாஹாவின் எதிர்காலம் குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இனிமேல் தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும்தான் அணியில் விக்கெட் கீப்பர்களாக நீடிப்பார்கள், சாஹாவால் இனி மீண்டு வரமுடியாது என்று உருவான கருத்துகளுக்குப் பதில் அளித்துள்ளார் சாஹா. தன்னுடைய ட்விட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

உடல்நலக்குறைவால் சாஹா, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார். ஒரு மோசமான காலக்கட்டத்தை அவர் எதிர்கொண்டுள்ளார். இந்தச் சமயத்தில் அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் அவருக்குப் பக்கபலமாக உள்ளார்கள். இந்நிலையில் அவருடைய எதிர்காலம் குறித்து ஜோதிடம் கூறுபவர்களுக்கு - ஒருவருடைய வருங்காலத்தைக் கணிப்பதை விடவும் அவர் விரைவில் நலமடைய வேண்டும் என்று வாழ்த்துங்கள். நாட்டுக்காக விளையாடி காயம் அடைந்தவருக்கு மரியாதை அளியுங்கள் என்று ட்விட்டரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்த இரு மாதங்களுக்கு சாஹாவால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பது குறித்து மருத்துவர்கள் விரைவில் முடிவெடுக்கவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.