அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிரபல கிரிக்கெட் வீரரிடம் ரூ.4 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்! 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டிடம் பெங்களூரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்று, ரூ.4 கோடி மோசடி செய்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2018, 12:38 pm

DIN

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டிடம் பெங்களூரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்று, ரூ.4 கோடி மோசடி செய்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். இவர் தற்போது இந்திய ‘ஏ’ அணி மற்றும் ஜூனியர் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

தற்பொழுது ராகுல் டிராவிட்டிடம் பெங்களூரில் உள்ள ஒரு நிதி நிறுவனம் ஒன்று ரூ.4 கோடி மோசடி செய்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

பெங்களூருவினைத் தலைமையிடமாகக் கொண்டு விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ராகுல் டிராவிட்டுக்கு நெருக்கமான நண்பரான முன்னாள் பத்திரிக்கையாளர் ஒருவரது பரிந்துரையின் பேரில் ராகுல் அந்த நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு சிறிய அளவில் முதலீடு செய்தார். 2015-ம் ஆண்டு அவரது பணம் திரும்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மேலும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு அவரது நண்பர் கூறியதன் பேரில்  டிராவிட் மீண்டும் ரூ.20 கோடி முதலீடு செய்தார். இதிலும் ரூ.16 கோடி அவருக்கு அடுத்த ஆண்டில் திரும்பி வந்து விட்டது.

ஆனால் 2017-ம் ஆண்டில் இருந்து அவருக்கு பணம் திரும்பச் செலுத்தப்படவில்லை.  ரூ.4 கோடி பணம் அவருக்கு வரவேண்டி இருந்தது. இதற்கிடையே அந்த நிறுவனம் 800 வாடிக்கையாளர்களிடம் ரூ.500 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. அத்துடன் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிரகாஷ் படுகோனே ஆகியோரும் அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது இது தொடர்பாக ராகுல் பெங்களூர் சதாஷிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தன்னிடம் விக்ரம் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி ரூ.4 கோடியை மோசடி செய்து விட்டதாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.