மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
இந்தூரின் ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய சோதனையின்போது, அங்கு 7 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து ரூ.4.3 லட்சம் ரொக்கம், 50 செல்லிடப் பேசிகள், ஒரே நேரத்தில் 16 செல்லிடப்பேசிகளை இயக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட தொலைத் தொடர்புக் கருவி, 2 மடிக் கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் அருகிலுள்ள உஜ்ஜைனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களுடன் தொடர்புடைய சூதாட்ட தரகர்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸார் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீா் தேக்கம்: பல்லடம் நகராட்சி மேலாளரிடம் புகாா்

இந்திய கம்யூ. கட்சியினா் நடைப்பயணம்

கலசலிங்கம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

நெசவாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



