ஆஃப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்: ரித்திமான் சாஹா

ஆஃப்கானிஸ்தானுடன் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா, வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்: ரித்திமான் சாஹா
Published on
Updated on
1 min read

ஆஃப்கானிஸ்தானுடன் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா, வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டித் தொடரின் குவாலிஃபையர் போட்டியின் போது விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆஃப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் சாஹா பங்கேற்பது கேள்விக்குரியாகியுள்ளது.

இதுகுறித்து ரித்திமான் சாஹா கூறியதாவது:

எனக்கு ஏற்பட்ட காயம் தீவிரமாகத்தான் உள்ளது. இருப்பினும் அடுத்த சில நாட்களில் எக்ஸ்ரே எடுத்த பின்னர் தான் ஆபரேஷன் செய்வது தொடர்பாக தெரிவிப்பதாக பிசிசிஐ மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக ஆஃப்கானிஸ்தான் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டி என்றில்லாமல் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருப்பது வருத்தம்தான். கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற உள்ளூர் ஆட்டத்தில் பங்கேற்காதது கூட வருத்தமாகத்தான் உள்ளது. ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு முக்கியம்தான்.

ஆஃப்கானிஸ்தான் போட்டிக்குள் நான் முழு உடல் தகுதி பெறுவேன் என்ற நம்பிக்கை இல்லை. எனவே அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான். இதுகுறித்து இந்திய அணித் தேர்வாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் நான் பங்கேற்கவில்லை என்றால் எனக்கு கூடுதல் ஓய்வு கிடைக்கும். எனவே இங்கிலாந்து தொடரில் நன்கு செயல்பட முடியும். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com