ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோலியின் கருத்து முட்டாள்தனமானது: பிசிசிஐ 

இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என்ற கோலியின் கருத்து முட்டாள்தனமானது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :8 நவம்பர் 2018, 11:16 am

DIN

இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் என்ற கோலியின் கருத்து முட்டாள்தனமானது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் மற்றும் நிர்வாகக் குழு இடையிலான ஆலோசனை கூட்டம் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில், பிசிசிஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய், டயானா எடுல்ஜி, தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐபிஎல் சிஓஓ ஹேமங்க் அமின், பொது மேலாளர் சபா கரிம், விராட் கோலி, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ரஹானே மற்றும் தலைமைத் தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் நிகழ்ந்தது குறித்து அதில் பங்கேற்ற பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துள்ளார். அதன்படி, 

இந்திய ஊடகங்கள் எப்போதுமே நமது வீரர்களை விமரிசிப்பார்கள் என்று ரவி சாஸ்திரி தொடங்கியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் மிகச் சிறந்த அணிகளில் இது ஒன்று என்று தெரிவித்திருக்கிறார். 

ரவி சாஸ்திரி இப்படி இந்த அணியின் பெருமையை குறித்து கூறுகையில், நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவர் அவரை நிறுத்தினார். தொடர்ந்து, ரவி சாஸ்திரியிடம் அவர் கூறுகையில், இந்த கூட்டத்தின் மையப் புள்ளியான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவோம். மக்களே நீதியரசர்களாக இருக்கட்டும் என்று தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, இந்திய வீரர்களை விரும்பாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கோலி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டத்தில் இது குறித்து பேசுகையில், 

"இது மிகவும் முட்டாள்தனமாக கருத்து. அவர் கவனமாக இருந்திருக்கவேண்டும். அவர் சம்பாதிக்கும் பணம், இந்தப் போட்டிக்காக இந்திய ரசிகர்கள் முதலீடு செய்துள்ளது என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும். 

எனினும், இந்த கருத்து அவருடைய தனிப்பட்ட நிகழ்விலோ அல்லது வணிக நோக்கத்திலோ பேசியுள்ளார். அவர் இதற்காக பிசிசிஐ-ஐ பயன்படுத்தவில்லை. அதனால், இது ஒரு விஷயம் கிடையாது" என்று பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.  

மேலும் இந்தக் கூட்டத்தில், நீங்கள் கேட்டது அனைத்துமே வழங்கப்பட்டுள்ளது. அதனால் உங்களிடம் இருந்து பிசிசிஐ சிறப்பான செயல்பாடுகளை எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்று பிசிசிஐ சார்பில் வீரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.