தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

பரபரப்பான டெஸ்ட் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய நியூஸிலாந்து!

டி20, ஒருநாள் ஆட்டம் போல பரபரப்பான முறையில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

டி20, ஒருநாள் ஆட்டம் போல பரபரப்பான முறையில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றுள்ளது நியூஸிலாந்து அணி.

அபு தாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் - நியூஸிலாந்து இடையிலான டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 153 ரன்களுக்குச் சுருண்டது. யாஷிர் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி 227 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. பாகிஸ்தானின் பாபர் அஸம் 62 ரன்கள் எடுத்தார். போல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து அணி, 249 ரன்கள் எடுத்தது. வால்டிங், நிகோல்ஸ் அரை சதங்கள் எடுத்தார்கள். ஹசன் அலி, யாசிர் ஷா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனால் பாகிஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிதான இந்த இலக்கை நன்கு எதிர்கொண்டது பாகிஸ்தான் அணி. ஒருகட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் என்கிற நிலையில் வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தபோது நியூஸிலாந்து அணி திடீரென விஸ்வரூபம் கொண்டது. அசாத் ஷபிக் 45 ரன்களில் வாக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பிறகு சரிவு ஏற்படத் தொடங்கியது. அடுத்த வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தார்கள். இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தார்கள். அஸார் அலி மட்டும் மறுமுனையில் பக்குவமாக நியூஸிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டு பாகிஸ்தான் அணியின் சரிவைத் தடுக்கப் போராடினார். ஆனால் பின்கள வீரர்களான பிலால் ஆசிஃப், யாசிர் ஷா, ஹசன் அலி ஆகிய மூவரும் டக் அவுட் ஆனதால் நியூஸிலாந்தின் வெற்றியைத் தடுக்கமுடியாமல் போனது. 136 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து வெற்றிக்காகப் போராடிய அஸார் அலி கடைசியாக ஆட்டமிழந்தார்.

பாகிஸ்தான் அணி 58.4 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பரபரப்பான முறையில் நடைபெற்ற டெஸ்டை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து. இந்த டெஸ்டின் மூலம் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. 

3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட், துபையில் நவம்பர் 24 அன்று தொடங்கவுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.