ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிசிசிஐயின் கட்டளையை மீறி அதிக ஓவர்கள் வீசியது ஏன்?: ஷமி விளக்கம்

எங்கோ பயிற்சி எடுப்பதை விடவும் உங்கள் அணிக்காக அதிக ஓவர்கள் வீசுவது நல்லது...

News image
Updated On :22 நவம்பர் 2018, 8:33 am

எழில்

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பெங்கால் அணிக்காக அவர் ரஞ்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறார். இதுதொடர்பாக, ஷமிக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதாக இருந்தால் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 15 ஓவர்கள் மட்டுமே வீசவேண்டும், தேவைப்பட்டால் கூடுதலாகச் சில ஓவர்கள் வீசிக்கொள்ளலாம் என ஷமிக்கு அறிவுறுத்தியுள்ளது பிசிசிஐ. ஆட்டத்தில் ஷமியின் பங்களிப்பு குறித்த விவரங்களைத் தினமும் அனுப்பவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரஞ்சி ஆட்டத்தால் ஷமியின் உடற்தகுதிக்குச் சிக்கல் எதுவும் நேரக்கூடாது என்பதால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஷமிக்கு விதித்துள்ளது பிசிசிஐ. இந்தக் கட்டுப்பாடுகளை பெங்கால் அணியும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் ஷமி 26 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிசிசிஐ நிர்ணயித்த 15 ஓவர்களுக்கும் அதிகமாக 11 ஓவர்களை வீசியுள்ளார் ஷமி. இதுபற்றி அவர் கூறியதாவது:

மாநிலத்துக்காக விளையாடும்போது உங்களுக்கான பொறுப்பைப் பூர்த்தி செய்யவேண்டும். பந்துவீசும்போது எனக்கு எந்த அசெளகரியமும் ஏற்படவில்லை. நல்ல உடற்தகுதியுடனே பந்துவீசினேன். ஆடுகளமும் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால் தொடர்ந்து பந்துவீச எண்ணினேன். அதிக ஓவர்கள் வீசவேண்டும் என்று நானே முடிவெடுத்தேன்.

எங்கோ பயிற்சி எடுப்பதை விடவும் உங்கள் அணிக்காக அதிக ஓவர்கள் வீசுவது நல்லது. இங்கு அதிகமாக வீச வீச அது எனக்கு ஆஸ்திரேலியாவில் உதவும். ஓர் ஆட்டத்தில் அதிக ஓவர்கள் வீசுவதுதான் நல்ல பயிற்சியாக அமையும். டெஸ்ட் தொடருக்கு நன்குத் தயாராகியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர், டிசம்பர் 6 முதல் தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.