சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

என் மீது மேட்ச் ஃபிக்ஸிங் புகார் இல்லை: ஜெயசூர்யா விளக்கம்

விளையாட்டு தொடர்பான விஷயங்களில் வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்துகொண்டுள்ளேன்... 

News image
Updated On :16 அக்டோபர் 2018, 11:50 am

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ஐசிசி ஊழல் தடுப்பு விசாரணைக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. ஆடுகளங்களை மாற்றி அமைத்தது தொடர்பான ஊழல் புகார் விசாரணைக்கு ஜெயசூர்யா உரிய ஒத்துழைப்பு தரவில்லை என அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2 வாரங்களில் அவர் பதில் அளிக்க வேண்டும் எனவும் அவகாசம் தரப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஜெயசூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: 

விளையாட்டு தொடர்பான விஷயங்களில் வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்துகொண்டுள்ளேன். என் மீதான புகாரில் மேட்ச் ஃபிக்ஸிங்கோ ஆடுகள மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டோ ஊழல் புகாரோ இல்லை. ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றுதான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என் மீதான புகார் குறித்து நான் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் ஐசிசி விதிமுறைகளை மீறிய குற்றத்துக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.