

கிரிக்கெட் மீதான உனது தீவிர நிலைத்தன்மை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கேப்டன் விராட் கோலியை பாராட்டியுள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37-ஆவது சதத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரன்களை வேகமாகக் கடந்த வீரர் எனும் புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
மொத்தம் 129 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 157 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இதன்மூலம் நடப்பாண்டில் 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் ஆனார். இதையடுத்து பல்வேறு சாதனைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட் மீதான உனது தீவிர நிலைத்தன்மை எனக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 10 ஆயிரம் ரன்களைக் கடந்ததற்கு வாழ்த்துகள். இந்த ரன் வெள்ளத்தை மேலும் தொடருக என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய கேப்டன் விராட் கோலியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.