மைதானத்துக்குள் நுழைந்து கிரிக்கெட் ஆட்டத்தை நிறுத்திய பாம்பு! (விடியோ)

விஜயவாடாவில் விதர்பா - ஆந்திரா இடையிலான ரஞ்சி  ஆட்டம் தொடங்க சிறிது கால தாமதமானது. காரணம் - மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு...
மைதானத்துக்குள் நுழைந்து கிரிக்கெட் ஆட்டத்தை நிறுத்திய பாம்பு! (விடியோ)
Updated on
1 min read

விஜயவாடாவில் விதர்பா - ஆந்திரா இடையிலான ரஞ்சி  ஆட்டம் தொடங்க சிறிது கால தாமதமானது. காரணம் - மைதானத்துக்குள் நுழைந்த பாம்பு!

விதர்பா கேப்டன் ஃபையஸ் ஃபஸல், டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். உற்சாகமாக மைதானத்துக்குள் நுழைந்த விதர்பா வீரர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. மைதானத்தில் பாம்பு ஒன்று அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஆட்டம் ஆரம்பமாக சிறிது காலதாமதமானது. பிறகு, பாம்பை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்திய பிறகே ஆட்டம் தொடங்கியது.

மைதானத்துக்குள் பாம்பு நுழைந்த விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com