ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஸ்வின் தான் நெ.1 சுழற்பந்துவீச்சாளர்: ரவி சாஸ்திரியின் பேட்டிக்கு எதிராக தேர்வுக்குழுத் தலைவர் கருத்து!

வீரர்களின் பங்களிப்பு, அணித்தேர்வு போன்ற விஷயங்களில் இந்திய அணியின் பயிற்சியாளரும் தேர்வுக்குழுத் தலைவரும் ஒரே அலைவரிசையில் உள்ளார்களா...

News image
Updated On :7 பிப்ரவரி 2019, 9:53 am

எழில்

வீரர்களின் பங்களிப்பு, அணித்தேர்வு போன்ற விஷயங்களில் இந்திய அணியின் பயிற்சியாளரும் தேர்வுக்குழுத் தலைவரும் ஒரே அலைவரிசையில் உள்ளார்களா என்கிற சந்தேகம்  எழுந்துள்ளது. 

அஸ்வின், ஜடேஜாவை விடவும் வெளிநாடுகளில் குல்தீப் யாதவ் தான் இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என ரவி சாஸ்திரி சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். சிட்னி டெஸ்டில் குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட், முக்கியமாக வெளிநாட்டு டெஸ்டுகளில் மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சின் காலமாகத்தான் இனி இருக்கப்போகிறது. சிட்னியில் அவர் பந்துவீசிய விதத்தின்மூலம், வெளிநாட்டு டெஸ்டுகளில் நம்முடைய பிரதான சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் உருவாகியுள்ளார். அதற்குள் அஸ்வின், ஜடேஜாவைக் காட்டிலும் அவரே பிரதான சுழற்பந்துவீச்சாளர். வெளிநாட்டு டெஸ்டில் விளையாடி, 5 விக்கெட்டுகளை குல்தீப் எடுத்துள்ளதால் அவரே வெளிநாடுகளில் நம்முடைய பிரதான சுழற்பந்துவீச்சாளர். இன்னும்  சொல்லவேண்டும் என்றால், வெளிநாடுகளில் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டும் விளையாடவைக்க முடியும் எனும்போது அவர்தான் தேர்வாவார். எல்லாவற்றுக்கும் ஒரு கால அளவு உள்ளது (2018-ல் அஸ்வினின் மோசமான உடற்தகுதியை முன்வைத்து). இப்போது, வெளிநாடுகளில் குல்தீப் தான் நம்முடைய முக்கியமான பந்துவீச்சாளர் என்று அவர் பேட்டியளித்தார். 

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:

இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் தான் பிரதான சுழற்பந்துவீச்சாளர். அதில் வேறெந்த சந்தேகமும் இல்லை. உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். நாங்கள் எந்த நாட்டில் விளையாடினாலும் அவர்கள் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் அஸ்வினை எப்படி எதிர்கொள்வது என்றுதான் திட்டமிடுவார்கள். அவர் நம்முடைய பிரதான சுழற்பந்துவீச்சாளர். அஸ்வினைப் பற்றிப் பேசும்போது நாம் சாதனையாளரைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும். நமக்காக அவர் அளித்த வெற்றிகள் எல்லாம் அபாரமானவை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக அவரிடமிருந்து என்ன மாதிரியான உடற்தகுதி தேவைப்படுகிறது என்பதை அவர் அறிவார். ஆடுகளத்தில் முயற்சி செய்பவருக்குத்தான் காயம் ஏற்படும். முயற்சி செய்யாதவருக்குக் காயம் ஏற்படாது. எனவே அவருடைய ஈடுபாட்டின் மீது எனக்குப் புகார்கள் இல்லை. காயம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அவர் மீண்டும் பெரிய அளவில் திரும்ப வருவார். அவர் இந்திய அணிக்குப் பங்களிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.