வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஏலத்தில் விடப்பட்ட போரீஸ் பெக்கரின் பொருள்கள்: ரூ. 5.84 கோடி கிடைத்தது!

பெக்கருடைய 82 பொருள்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ரூ. 5.84 கோடி பெக்கருக்குக் கிடைத்துள்ளது... 

News image
Updated On :12 ஜூலை 2019, 9:27 am

எழில்

17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற சாதனைக்குரியவர் ஜெர்மனியின் போரீஸ் பெக்கர். 3 விம்பிள்டன் பட்டம் உள்பட 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 49 பட்டங்களை வென்றவர். 

பல்வேறு கடன் பிரச்னைகளில் சிக்கியுள்ள 51 வயது பெக்கர் அவற்றைத் தீர்ப்பதற்காகப் போராடி வருகிறார். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக தான் விளையாடி பெற்ற கோப்பைகள், பரிசுப்பொருள்களை ஏலத்தில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெக்கருடைய 82 பொருள்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ரூ. 5.84 கோடி பெக்கருக்குக் கிடைத்துள்ளது. இதில் அவருடைய 1989 யு.எஸ். ஓபன் கோப்பையால் மட்டும் 1 கோடியே 29 லட்சம் கிடைத்துள்ளது. நேற்றுடன் முடிவடைந்த இந்த ஏலத்தில் கிடைத்துள்ள வருவாய் மூலம் பெக்கரின் ஒரு பகுதி கடன்கள் செலுத்தப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.