மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ஒருவேளை உடற்தகுதியில் தோல்வியடைந்திருந்தால்! பிரியாவிடை போட்டி குறித்து மனம் திறந்த யுவராஜ் சிங்

ஓய்வு முடிவு அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங் பிரியாவிடை ஆட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு...

News image
Updated On :11 ஜூன் 2019, 5:25 am

ஓய்வு முடிவு அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ் சிங் பிரியாவிடை ஆட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்ததாவது:

ஒருவேளை எனக்கு பிரியாவிடை போட்டி நடந்து, நான் மைதானத்தில் ஓய்வு பெற்றிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். ஆனால், போட்டியில் இடம்பெறுவது தொடர்பாக கோரிக்கை வைக்க நான் விரும்புவதில்லை. ஏனென்றால் அதுபோன்ற ஒரு மனநிலையில் நான் இந்திய அணிக்காக என்றும் விளையாடியதில்லை.

ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண் போன்ற பெரிய ஜாம்பவான் வீரர்களுக்கு கூட பிரியாவிடை போட்டி ஏற்படுத்தப்படவில்லை. ஒருவேளை நான் யோ யோ தேர்வில் தோற்றிருந்தால் எனக்கு பிரியாவிடை போட்டி அளிப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. ஆனால், எனது இறுதிப் போட்டி தொடர்பாக நான் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் எதுவும் தெரிவிக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.