ஆக்ரோஷமான வீரர் ஆனால் இரக்கமுள்ள மனிதர்: விராட்டுக்காக உருகிய அனுஷ்கா

இந்திய கேப்டன் விராட் கோலி மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 
ஆக்ரோஷமான வீரர் ஆனால் இரக்கமுள்ள மனிதர்: விராட்டுக்காக உருகிய அனுஷ்கா
Updated on
1 min read

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தின்போது இந்திய ரசிகர்கள் பலர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அவமதிக்கும் விதமாக கூச்சலிட்டனர். 

அப்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி குறுக்கிட்டு, அதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் அவருக்கு ஆதரவும், உற்சாகமும் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

தவறான முன் உதாரணத்தை இந்திய ரசிகர்கள் ஏற்படுத்திவிடக் கூடாது. ஒருவேளை ஸ்மித் இடத்தில் நான் இருந்து அதே தவறை செய்து அதனை ஒப்புக்கொண்டு மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்திருந்தால், ரசிகர்களின் அதுபோன்ற செயலை நிச்சயம் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன், நிச்சயம் வருந்தியிருப்பேன் என்று போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி தெரிவித்தார்.

இந்திய கேப்டன் விராட் கோலியின் இந்த செயலை ஐசிசி மட்டுமல்லாது கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவராலும் பாராட்டுக்குள்ளாகி வருகிறது. இதை குறிப்பிடும் விதமாக அவருடைய மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்,

விராட் கோலி ஆக்ரோஷமான வீரர், ஆனாலும் இரக்கமுள்ள மனிதர், விரும்புவதற்கு மிகவும் எளிமையானவர் என்று காதல் கணவருக்காக கசிந்து உருகியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com