பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

உலக கோப்பை: இங்கிலாந்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 213 ரன்கள் இலக்கு 

நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2019, 7:55 pm IST

சவுதாம்டன்: நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி 213 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெள்ளியன்று இங்கிலாந்து மற்றும்மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 19-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடக்க வீரர் எவின் லூயிஸ் 2 ரன்களில் வோக்ஸின் அற்புதமான பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கிறிஸ் கெயில். பவுண்டரிகளை அவ்வப்போது அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வோக்ஸ் பந்துவீச்சில் இவர் அளித்த கேட்சைத் தவறவிட்டார் வுட். மறுமுனையில் ஷாய் ஹோப் நிதானமாக விளையாடி வர, அதிரடியாக விளையாடிய கெயில், 36 ரன்களில் பிளெங்கெட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே ஷாய் ஹோப் 30 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வுட் பந்துவீச்சில் வெளியேறினார். 

இதன்பிறகு ஜோடி சேர்ந்த பூராணும் ஹெட்மையரும் பந்துகளை வீணடிக்காமல் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 89 ரன்கள் சேர்த்த இவர்களைப் பிரித்தார் ஜோ ரூட். ஹெட்மையர் 39 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. ரூட் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்த ஹோல்டர் அடுத்தப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு இரண்டு சிக்ஸர்கள் அடித்த ரஸ்ஸல், வுட் பந்துவீச்சில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.  மறுபுறம் நிலைத்து ஆடி தனது அரைசதத்தை பதிவு செய்த நிகோலஸ் பூரன் 63 ரன்னில் அவுட் ஆனார். 

அவரை தொடர்ந்து,  ஷெல்டன் காட்ரெல் ரன் எதுவும் எடுக்காமலும், பிராத்வெய்ட் 14 ரன்னிலும், ஷனோன் கேப்ரியல்  ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 212 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர மற்றும் மார்க்வுட்  தலா 3 விக்கெட்களும், ஜோ ரூட்  2 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிளங்கெட் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.