இந்திய அணியில் விஜய் சங்கர் நீக்கம்: இங்கிலாந்து அரையிறுதிக்கு செக்?

இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவோமோ அல்லது வெளியேற்றப்படுவோமா என்ற தடுமாற்றத்தில் உள்ளது.
இந்திய அணியில் விஜய் சங்கர் நீக்கம்: இங்கிலாந்து அரையிறுதிக்கு செக்?
Updated on
1 min read

2019 உலகக் கோப்பை தொடரில் பர்மிங்ஹாமில் இந்தியாவுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முக்கிய ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவோமோ அல்லது வெளியேற்றப்படுவோமா என்ற தடுமாற்றத்தில் உள்ளது.

போட்டி தொடங்கும் முன்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து, எதிர்பாராமல் பெற்ற 3 தோல்விகளால் திடீரென அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

அதே நேரத்தில் இந்தியா தொடர்ந்து 5 ஆட்டங்களில் வென்று பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்னும் 1 வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு முன்னேறி விடும். மேலும் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் இந்தியாவிடம் பறிகொடுத்து விட்டது இங்கிலாந்து.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் இந்திய அணியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளின் விவரம் பின்வருமாறு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com