ஐபிஎல்: 3 புதிய நகரங்களுக்கு வாய்ப்பு!

ஐபிஎல்-லில் கூடுதலாக அணிகளைச் சேர்ப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. எனினும் அடுத்த வருடம் கூடுதலாக மூன்று நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஐபிஎல்: 3 புதிய நகரங்களுக்கு வாய்ப்பு!
Updated on
1 min read

ஐபிஎல்-லில் கூடுதலாக அணிகளைச் சேர்ப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை. எனினும் அடுத்த வருடம் கூடுதலாக மூன்று நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் உயரதிகாரக் குழுக் கூட்டம் அதன் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. லக்னோ, குவஹாட்டி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று நகரங்களிலும் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

தங்கள் அணிக்கான ஆட்டங்கள் சிலவற்றை லக்னோவில் நடத்திக்கொள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல அஹமதாபாத்துக்குப் பதிலாக குவஹாட்டியில் சில ஆட்டங்களை நடத்திக்கொள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விருப்பம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமானோர் இருப்பதால் அங்கும் ஐபிஎல் ஆட்டங்களை நடத்தலாம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com