சிகிச்சை முடிந்து, பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளார் பாண்டியா!

கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சை முடிந்து, பயிற்சியில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியுள்ளார் பாண்டியா!
Updated on
1 min read

முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குக் கடந்த மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து, தற்போது மைதானத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளார் பாண்டியா. அறுவை சிகிச்சை முடிந்து, குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஓய்வுக்குப் பிறகே மீண்டும் சர்வதேச ஆட்டங்களில் பாண்டியா பங்கேற்பார் என முதலில் சொல்லப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மைதானத்துக்குத் திரும்பி பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் பாண்டியா. இங்கு வந்து நீண்ட நாளாகிவிட்டது. மைதானத்துக்குத் திரும்புவதை விடவும் வேறு நல்ல உணர்வு கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் விதமாகப் பயிற்சிகள் எடுக்கும் விடியோவையும் பகிர்ந்துள்ளார்.

25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com