பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்: ஷுப்மன்கில் அபாரம்

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வலுவான நிலையில் உள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2019, 1:07 am IST


இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வலுவான நிலையில் உள்ளது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 233/3 ரன்களை எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 92 ரன்களை குவித்தார்.
ஏற்கெனவே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது. 
தொடக்க வீரர் ஷுப்மன் கில் 1 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 92 ரன்களை குவித்து அவுட்டானார். கருண் நாயர் 78 ரன்களுடனும், ரித்திமான் சாஹா 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இளம் வீரர் பிரியங்க் பஞ்சால் 31, அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். பின்னர் ஷுப்மன் கில்-கருண் நாயர் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். லுங்கி கிடி, முல்டர், சிபாம்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.