கிரிக்கெட் விளையாட்டின் லெஜண்ட் மகேந்திர சிங் தோனி என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
2019 உலகக் கோப்பைத் தொடரில் தோனியின் ஆட்டம் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடைசி கட்டத்தில் அவர் ரன்குவிக்கத் தடுமாறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுதொடர்பாக விராட் கோலி கூறுகையில்,
களத்தில் எதைச் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று தோனிக்கு நன்கு தெரியும். கிரிக்கெட்டை சரியாக கணித்து விளையாடுபவர். இது நாம் அனைவரும் அறிந்தது தான். அவர் கிரிக்கெட் விளையாட்டின் லெஜண்ட். சரியாக விளையாடாதபோது விமர்சனங்கள் வருவது சகஜம்தான்.
இந்திய அணிக்கு பல வெற்றிகளை தோனி பெற்றுத்தந்திருக்கிறார். எனவே அணியின் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு. எப்போது எவ்வளவு ரன்கள் தேவைப்பட்டாலும் அதை அடித்துக்கொடுப்பார். தோனியின் அனுபவம் 10-ல் 8 முறை வெற்றிகரமாக உதவியுள்ளது.
சிலருக்கு மட்டுமே அடுத்த என்ன நடக்கும் என்று கணிக்கும் திறன் இருக்கும். அதுபோன்ற ஒரு வீரர் தான் தோனி. கிரிக்கெட் குறித்த முழு புரிதலும் அவருக்கு உண்டு. ஒவ்வொரு ஆட்டத்திலும் இத்தனை ரன்கள் போதுமானது என்று கூறினால் அது நிச்சயம் சரியாகவே அமைந்தது உண்டு என்று தெரிவித்தார்.