அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு கரோனா

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

News image
படம் - பிடிஐ
Updated On :18 ஆகஸ்ட் 2020, 6:55 am

DIN

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சரிதா தேவியின் கணவர் தொயிபா கூறியதாவது:

நானும் சரிதா தேவியும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். கோவிட் மையத்துக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வோம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுவது இங்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிமிடம் வரை எங்களிடம் கரோனா அறிகுறிகள் இல்லை. எங்களிடம் தொடர்பு கொண்டவர்களிடம் இத்தகவலை கூறியுள்ளோம். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

தேசியக் குத்துச்சண்டைப் பயிற்சி முகாம், பாட்டியாலாவில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் சரிதா தேவி பங்கேற்கவில்லை. தற்போது மணிப்பூரில் அவர் பயிற்சி பெற்று வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.