டிஆர்எஸ் முறையீடுக்கு அனுமதிக்காத நடுவர்: விக்கெட்டைத் தவறவிட்ட நடராஜன்

கோலி, நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். எனினும் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. 
டிஆர்எஸ் முறையீடுக்கு அனுமதிக்காத நடுவர்: விக்கெட்டைத் தவறவிட்ட நடராஜன்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெறுகிறது. 

காயம் காரணமாக 2-வது டி20 ஆட்டத்தில் இடம்பெறாத ஆரோன் ஃபிஞ்ச், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் தலைமை தாங்குகிறார். ஆஸி. அணியில் ஸ்டாய்னிஸ் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. மயங்க் அகர்வால், ஷமி, பும்ரா ஆகியோருக்கு டெஸ்ட் தொடருக்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

11-வது ஓவரில் நடராஜன் வீசிய பந்து, மேத்யூ வேட்-ன் காலில் பட்டது. இதனால் எல்பிடபிள்யூ கோரினார் நடராஜன். ஆனால் கள நடுவர் அவுட் தர மறுத்துவிட்டார். 

இதன்பிறகு மைதானத்தில் உள்ள பெரிய திரையில் இது காண்பிக்கப்பட்டது. அப்போது அவுட் போலத் தெரிந்ததால் உடனே டிஆர்எஸ் கோரினார் கோலி. இதை ஏற்றுக்கொண்ட நடுவரும் டிஆர்எஸ்ஸுக்கு சைகை காண்பித்தார். ஆனால் மேத்யூ வேட் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். பெரிய திரையில் காண்பித்த பிறகு முறையீடு செய்யலாமா எனக் கேட்டார். இதனால் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். டிஆர்எஸ் கிடையாது என அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கோலி, நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். எனினும் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. 

ஆனால் ரீப்ளேயில் காண்பிக்கப்பட்டபோது, மேத்யூ வேட் எல்பிடபிள்யூ ஆகியிருந்தார். இதனால் விக்கெட் எடுக்கும் வாய்ப்பைப் பறிகொடுத்தார் நடராஜன். 

ஆஸ்திரேலிய அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூ வேட் 68, மேக்ஸ்வெல் 22 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com