படம் - twitter.com/BCCI
படம் - twitter.com/BCCI

இங்கிலாந்துடனான பகலிரவு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறும்: ஜெய் ஷா தகவல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட், பிப்ரவரி 24 அன்று ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என...

2021-ம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட், பிப்ரவரி 24 அன்று ஆமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

குஜராத் கிரிக்கெட் அகாடமியின் உள்ளூர் அரங்கத்தை இன்று திறந்து வைத்த ஜெய் ஷா இத்தகவலை கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட், பிப்ரவரி 7 அன்று தொடங்கும். பகலிரவு டெஸ்ட் ஆட்டம் ஆமதாபாத் மோடேரா மைதானத்தில் பிப்ரவரி 24 அன்று நடைபெறும். ஐந்து டி20 ஆட்டங்களும் மோடேரா மைதானத்தில் நடைபெறும் என்றார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மோடேரா மைதானம் கட்டப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் அமர முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com