நாளைய டி20 போட்டியில் சாதனை செய்வாரா பும்ரா?

மேலும் ஒரு விக்கெட் எடுத்தால் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெறுவார் பும்ரா.
நாளைய டி20 போட்டியில் சாதனை செய்வாரா பும்ரா?
Updated on
1 min read

குவாஹாட்டியில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாம் ஆட்டம் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 142/9 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. 

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 ஆட்டம் புணேவில் நாளை நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தவுள்ளார் பும்ரா.

டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களாக அஸ்வின், சஹால், பும்ரா ஆகிய மூவரும் உள்ளார்கள். மூவரும் தலா 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். அஸ்வின் 46 ஆட்டங்களிலும் பும்ரா 44 ஆட்டங்களிலும் சஹால் 36 ஆட்டங்களிலும் இந்த இலக்கை எட்டியுள்ளார்கள்.

நாளைய டி20 ஆட்டத்தில் சஹால் இடம்பெறுவது சந்தேகமே. இதனால் மேலும் ஒரு விக்கெட் எடுத்தால் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெறுவார் பும்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com