பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவருடன் இவரது கிளப் அணியான பிஎஸ்ஜியைச் சேர்ந்த ஏஞ்சல் டி மரியா மற்றும் லியாண்ட்ரோ பாராடேஸ் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிஎஸ்ஜி அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளனர்.
பிரான்ஸில் நடைபெறவுள்ள கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காகப் புறப்பட 8 நாள்களே உள்ள நிலையில், 3 வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.