பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஐபிஎல்: துபைக்குப் புறப்பட்டார் செளரவ் கங்குலி

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபைக்குப் புறப்பட்டார் செளரவ் கங்குலி

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 12:10 pm

DIN

ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபைக்குப் புறப்பட்டார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதுகின்றன. 

ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட துபைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. 6 மாதங்களுக்குப் பிறகு விமானத்தில் பயணம் செய்வதாக இன்ஸ்டகிராமில் தன்னுடைய துபைப் பயணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். 

ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உள்ளிட்ட பிசிசிஐ அதிகாரிகள் பலரும் துபைக்கு ஏற்கெனவே சென்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.