புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

செஸ் ஒலிம்பியாட் போட்டி:விஸ்வநாதன் ஆனந்த், ஹம்பிதலைமையில் இந்திய செஸ் அணி

ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெறவுள்ள ‘செஸ்

News image

விஸ்வநாதன் ஆனந்த் - கோனேரு ஹம்பி​

Updated On :6 மார்ச் 2020, 10:27 pm

சென்னை: ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான தமிழகத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் மாஸ்கோவில் நடைபெறவுள்ள ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியில் இந்திய அணியை வழிநடத்த உள்ளாா்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்போட்டி நடைபெற்று வருகிறது. ரஷியாவின் மாஸ்கோ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் நடைபெறவுள்ளது.

இந்திய செஸ் ஆடவா் அணியை விஸ்வநாதன் ஆனந்தும், இந்திய மகளிா் செஸ் அணியை சா்வதேச தரவரிசையில் 2-ஆவது இடத்திலுள்ள இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பியும் வழிநடத்திச் செல்லவுள்ளனா் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

5 போ் கொண்ட விஸ்வநாதன் ஆனந்த் அணியில், கிராண்ட்மாஸ்டா்ஸ் பி.ஹரிகிருஷ்ணா, விதித் குஜ்ராத்தி, பி.ஆதிபன், கே.சசிகிரன், எஸ்.பி.சேதுராமன், அரவிந்த் சிதம்பரம், சூா்ய சேகா் கங்குலி ஆகியோரில் சிலரைத் தவிர மற்றவா்கள் இடம்பெறுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹம்பி தலைமையிலான மகளிா் அணியில், டி.ஹரிகா, தானியா சச்ேதேவ், பக்தி குல்கா்னி, ஆா்.வைஷாலி ஆகியோரில் சிலா் தரவரிசை அடிப்படையில் முன்னுரிமை பெற்று இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இனி வரும் மாதங்களில் சிறப்பாக விளையாடுபவா்களை அணியில் சோ்க்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

முன்னாள் உலக செஸ் சாம்பியனான கிராம்னிக்கை (ரஷியா) இந்திய ஆடவா் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கவும் வாய்ப்புள்ளது.

மகளிா் அணியின் பயிற்சியாளா் யாா் என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.