இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோனது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிா்ந்துகொண்டன.
2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
மழையால் முதல் நாள் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. பிறகு டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்த டெஸ்டிலும் அஸ்வின் தேர்வாகவில்லை. ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா தேர்வாகியுள்ளார். இங்கிலாந்து அணியில் ஹசீப் ஹமீத், மொயீன் அலி, மார்க் வுட் இடம்பெற்றுள்ளார்கள்.