ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூட் 170*: முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது இங்கிலாந்து

​இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 5:14 pm

DIN


இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ஜோ ரூட்டின் அபார சதத்தால் அந்த அணி 300-ஐத் தாண்டி 3-வது நாள் தேநீர் இடைவேளையில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்திருந்தது.

ரூட் 132 ரன்களுடனும், மொயீன் அலி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 150 ரன்களைத் தாண்டினார். ஆனால், மொயீன் அலியால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 27 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாம் கரன் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் இஷாந்திடம் வீழ்ந்தார்.

அடுத்து களமிறங்கிய ஆலி ராபின்சனும் 6 ரன்களுக்கு முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, மார்க் வுட் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஒத்துழைப்பு தர ரூட் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

இதன்மூலம், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே வுட் ரன் முறையில் ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழக்கும்போது இங்கிலாந்து 7 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கடைசி பேட்ஸ்மேனாக ஜேம்ஸ் ஆண்டர்சன் களமிறங்கினார். 

கடைசி விக்கெட் என்பதால் ரூட் அதிரடிக்கு மாற முயற்சித்துள்ளார்.

சற்று முன்பு வரை இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 376 ரன்கள் குவித்து 12 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

ரூட் 170 ரன்களுடனும், ஆண்டர்சன் ரன் ஏதும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.