ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவை திணறடிக்கும் ஜோ ரூட்: 300-ஐத் தாண்டியது இங்கிலாந்து

​இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 3:09 pm

DIN


இந்தியாவுடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது73 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 89, ஜானி பேர்ஸ்டோவ் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பேர்ஸ்டோவ் 57 ரன்களுக்கு முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். எனினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 22-வது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

அவருக்கு ஒத்துழைப்பு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாஸ் பட்லர் 23 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் போல்டானார். 

ஆனால், அடுத்து களமிறங்கிய மொயீன் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரூட்டுடன் பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த இணை 3-ம் நாள் தேநீர் இடைவேளை வரை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டது. இதனால், அணியின் ஸ்கோரும் 300-ஐத் தாண்டியது.

தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ரூட் 132 ரன்களுடனும், மொயீன் அலி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இன்னும் 50 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.