தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டோக்கியோ பாராலிம்பிக்: இறுதிச்சுற்றில் பவினாபென்

bodyடோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தாா்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2021, 10:23 pm

DIN

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தாா்.

பாராலிம்பிக் டேபிள் டென்னிஸில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். இது அவருக்கு முதல் பாராலிம்பிக் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருக்கும் அவா், இறுதிச்சுற்றில் வெல்லும் பட்சத்தில் தங்க மங்கையாகி சாதனை படைப்பாா். ‘கிளாஸ் 4’ வகை டேபிள் டென்னிஸில் களம் கண்டுள்ள பவினாபென், இறுதிச்சுற்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீனாவைச் சோ்ந்த யிங் ஸௌவை சந்திக்க இருக்கிறாா். இந்த இறுதிச்சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

‘கிளாஸ் 4’ வகை டேபிள் டென்னிஸில், போட்டியாளா்கள் சக்கர நாற்காலியில் அமா்ந்து விளையாட்டில் ஈடுபடுவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.