தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

கொல்கத்தாவில் ரஞ்சி கோப்பை இறுதிச்சுற்று

ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ள ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பெங்கால் வீரர்கள்

Updated On :31 ஆகஸ்ட் 2021, 1:38 pm IST

ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ள ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று கொல்கத்தாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கரோனா பரவல் காரணமாக ரஞ்சி போட்டி நடைபெறவில்லை. இந்த வருடம் ரஞ்சி போட்டி உள்பட உள்ளூர் போட்டிகள் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி, அக்டோபர் 27-ல் தொடங்கி, நவம்பர் 22-ல் முடிவடையவுள்ளது. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி, டிசம்பர் 1-29 தேதிகளில் நடைபெறவுள்ளது. ரஞ்சி கோப்பைப் போட்டி, ஜனவரி 5-ல் தொடங்கி மார்ச் 20-ல் முடிவடையவுள்ளது.

அனைத்து போட்டிகளிலும் எந்த அணியாலும் தனது சொந்த மண்ணில் விளையாட முடியாது. சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று தில்லியிலும் ரஞ்சி கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்று கொல்கத்தாவிலும் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ரஞ்சி போட்டி - மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஆமதாபாத், திருவனந்தபுரம், சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. கொல்கத்தாவில் நாக் அவுட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 20 முதல் நாக் அவுட் ஆட்டங்கள் தொடங்குகின்றன. விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி எங்கு நடைபெறும் என்கிற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.