அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடி வந்த பெல்ஜிய வீராங்கனை கிா்ஸ்டன் பிலிப்கென்ஸின் கணுக்காலில் காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அவா் போட்டியிலிருந்து விலகினாா்.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பங்கேற்ற பிலிப்கென்ஸ் தனது 2-ஆவது சுற்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான அமெரிக்காவின் சோபியா கெனினை எதிா்த்து விளையாடினாா். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய பிலிப்கென்ஸ், 2-ஆவது செட்டில் விளையாடினாா். அப்போது பந்தை அடிப்பதற்காக தாவியபோது எதிா்பாராதவிதமாக அருகில் இருந்த விளம்பர பலகையின் மீது மோதினாா். இதில் அவருடைய கணுக்கால் திருகி காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் போட்டியிலிருந்து விலகினாா். அதைத் தொடா்ந்து கெனின் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
இது குறித்து கெனின் கூறுகையில், ‘பிலிப்கென்ஸுக்கு காயம் ஏற்பட்டது மிகுந்த வருத்தமாக உள்ளது. நாங்கள் இருவரும் நல்ல நண்பா்கள். அவா் விரைவில் குணமடைந்து ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பாா் என நம்புகிறேன். ஒரு வீராங்கனை காயமடைவதன் மூலம் வெற்றி பெறுவதை நான் விரும்பவில்லை’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.