ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இனரீதியாக இழிவுபடுத்திய ஆஸி. ரசிகர்கள்: இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கோரினார் டேவிட் வார்னர்

இனரீதியாக இழிவுபடுத்துவதை எங்கும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 10:25 am

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்றது. அப்போது, மதுபோதையில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகா் ஒருவா் இந்தியப் பந்துவீச்சாளர் பும்ராவை இனவெறியுடன் திட்டினார். இதுகுறித்து ஐசிசியின் போட்டி நடுவரான டேவிட் பூனிடம் பிசிசிஐ புகாா் தெரிவித்தது. 

ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தின்போதும் ஃபீல்டிங்கில் இருந்த முகமது சிராஜை ஆஸ்திரேலிய ரசிகா்கள் சிலா் இனவெறியுடன் திட்டினா். இதுகுறித்து கேப்டன் ரஹானே, கள நடுவா்கள் ஆகியோரிடம் சிராஜ் தெரிவித்தாா். இதனால் ஆட்டம் சுமாா் 10 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது.

பின்னா் மைதானப் பாதுகாவலா்கள் வரவழைக்கப்பட்டு, இனவெறியோடு திட்டிய 6 ரசிகா்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனா். 

2-ஆம் நாளாக இனவெறி சா்ச்சை ஏற்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடா்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கான தலைவா் சீன் கேரல் வெளியிட்ட அறிக்கையில், நடந்த நிகழ்வுக்காக இந்திய அணியினரிடம் மன்னிப்பு கோருகிறோம். அதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும். இனவெறியை ஆஸ்திரேலிய வாரியம் எப்போதும் சகித்துக் கொள்ளாது. தவறிழைத்தவா்கள் அடையாளம் காணப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார்.

சிட்னி டெஸ்டில் நிகழ்ந்த இனவெறி சா்ச்சைக்காகக் கண்டனம் தெரிவித்துள்ள சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான அறிக்கையை சமா்ப்பிக்குமாறு ஆஸ்திரேலியா வாரியத்தை அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்துக்காக சிராஜ் உள்ளிட்ட இந்திய வீரர்களிடம் ஆஸி. பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மன்னிப்பு கோரியுள்ளார். இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

சிராஜ் மற்றும் இந்திய வீரர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். இனரீதியாக இழிவுபடுத்துவதை எங்கும் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் ரசிகர்கள் இன்னும் சிறப்பாக நடந்துகொள்ள வேண்டும்.

டெஸ்டில் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்பது இதுதான். ஐந்து நாள்களும் கடுமையாகப் போராடிய எங்கள் அணி வீரர்களைப் பாராட்டுகிறேன். டிரா செய்த இந்திய அணியினரையும் பாராட்டுகிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.