ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காயத்திலிருந்து முழுமையாக மீண்டார் ஷமி: ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவுள்ளார்

இப்போது நல்ல வெளிநாட்டு வீரர்கள் உள்ளார்கள். பலமான அணியாக உள்ளதால் இந்தமுறை நன்கு விளையாட வாய்ப்புண்டு.

News image
Updated On :29 மார்ச் 2021, 9:48 am

DIN

காயம் காரணமாக ஐபிஎல் போட்டிக்குத் தயாராக நிறைய நேரம் இருந்தது என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்.

அடிலெய்ட் டெஸ்டில் பேட்டிங் செய்தபோது ஷமியின் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியத் தொடரின் இதர ஆட்டங்களிலும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களிலும் ஷமி பங்கேற்கவில்லை. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக ஷமி பங்கேற்கவுள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஷமி பேட்டியளித்ததாவது:

நீண்ட நாளாக உடற்தகுதி பிரச்னை இல்லாமல் இருந்தேன். பேட்டிங் செய்கிறபோது காயம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது. என்னால் இதை ஒன்றும் செய்ய முடியாது. விளையாட்டில் காயம் ஏற்படுவதும் ஒரு பகுதிதான். 

நேர்மறை விஷயங்களையே நான் பார்ப்பேன். கடந்த பருவம் எனக்கு நன்றாக அமைந்தது. அந்த ஃபார்மை ஐபிஎல் போட்டிக்கும் என்னால் கொண்டு செல்ல முடியும். காயம் காரணமாக ஐபிஎல் போட்டிக்குத் தயாராக நிறைய நேரம் இருந்தது. என்.சி.ஏ.வில் தான் பல நாள்கள் இருந்தேன். நான் வீட்டுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் கரோனா அச்சுறுத்தலால் என்.சி.ஏ.வில் அதிக காலம் செலவிட முடிவெடுத்தேன். அங்குள்ள வசதிகள் நன்றாக இருக்கும். அங்கு கரோனா வழிமுறைகளையும் பின்பற்ற முடியும். 

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி மோசமாக விளையாடிய பழைய அனுபவங்களை மாற்ற முடியாது. கடந்த பருவத்தில் என் திறமையை அதிகமாக வெளிப்படுத்தினேன். மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் முடிந்தவரை உதவி செய்தேன். இப்போது நல்ல வெளிநாட்டு வீரர்கள் உள்ளார்கள். பலமான அணியாக உள்ளதால் இந்தமுறை நன்கு விளையாட வாய்ப்புண்டு. நூலிழையில் சில ஆட்டங்களில் தோற்றோம். முந்தைய வருடத்தை விடவும் கடைசி ஓவர்களில் ஓரளவு நன்றாகப் பந்துவீசினோம். எனவே இந்தமுறை நன்றாக விளையாடுவோம் என்றார். 

2020 ஐபிஎல் போட்டியில் 14 ஆட்டங்களில் விளையாடிய ஷமி, 20 விக்கெட்டுகள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி ஏப்ரல் 12 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.