கரோனா பாதிப்பால் தாயை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகத் தனது தாயை இழந்துள்ளார் இந்திய வீராங்கனையான பிரியா புனியா.


கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகத் தனது தாயை இழந்துள்ளார் இந்திய வீராங்கனையான பிரியா புனியா.
கரோனா 2-வது அலையில் பல கிரிக்கெட் வீரர்கள் அதிகப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். முன்னாள் வீரர்களான ஆர்.பி. சிங்கும் பியூஷ் சாவ்லாவும் தங்களது தந்தையை கரோனா பாதிப்பின் காரணமாக இழந்துள்ளார்கள். கரோனாவால் தாயை இழந்த அடுத்த இரு வாரத்தில் சகோதரியையும் இழந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி.
இதே நிலைமை மற்றொரு கிரிக்கெட் வீராங்கனைக்கும் ஏற்பட்டுள்ளது. 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான பிரியா புனியா, 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
பிரியா புனியாவின் தாய் சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தனது தாய் இறந்த தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார் பிரியா புனியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...